225. அழகியநாதர் கோயில்
இறைவன் அபிராமேஸ்வரர், அழகியநாதர்
இறைவி முத்தம்பிகை
தீர்த்தம் பம்பை ஆறு, பத்ம தீர்த்தம்
தல விருட்சம் வன்னி மரம்
பதிகம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்
தல இருப்பிடம் திருவாமாத்தூர், தமிழ்நாடு
வழிகாட்டி விழுப்புரத்துக்கு வடமேற்கே 7 கி.மீ. தொலைவில் பம்பை என்னும் நதியின் வடகரையில் செஞ்சி சாலையில் அமைந்துள்ளது. விழுப்புரத்திலிருந்து சூரப்பட்டு நகரப் பேருந்தில் செல்லலாம்.
தலச்சிறப்பு

Tiruvamathur Gopuramகொம்புகள் இல்லாமல் இருந்த பசுக்கள் இங்கு வழிபட்டு கொம்புகளைப் பெற்றதால் பசுக்களின் தாயகமாக இத்தலம் கருதப்படுகிறது. ஆ-பசு. ஆதலால் ஆமாத்தூர் என்று பெயர் பெற்றது. பசுக்கள் வழிபட்டதால் இறைவனின் திருமேனியில் அதன் குளம்பின் வடு உள்ளது. இராமபிரான் வழிபட்டதால் சுவாமிக்கு 'அபிராமேஸ்வரர்' என்ற பெயர் வந்தது.

Tiruvamathur AmmanTiruvamathur Moolavarசாபத்தினால் வன்னி மரமான பிருங்கி முனிவர் இத்தலத்து அம்பிகையை வணங்கி சாபம் நீங்கப் பெற்றார். அம்மனுக்கு தனிக்கோயில் உள்ளது. இங்கு வட்டப்பாறை அம்மன் சன்னதியும் உள்ளது.

முருகப்பெருமானின் அடியார்களுள் ஒருவரான வண்ணச்சரபம் தண்டபாணிச் சுவாமிகள் சமாதியடைந்த தலம். இவரது சமாதிக் கோயில் கோயிலுக்கு அருகில் உள்ளது.

மூவர் தேவாரம் பெற்ற சிறப்புடைய தலம். சம்பந்தரும், அப்பரும் தலா 2 பதிகங்களும், சுந்தரர் ஒரு பதிகமும் இத்தலத்திற்கு பாடியுள்ளனர். அருணகிரிநாதர் திருப்புகழ் பாடியுள்ளார். காலை 6 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8.30 வரையிலும் நடை திறந்திருக்கும். தொடர்புக்கு : 9843066252, 04146-223379.

Back

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com